Monday 9 July 2012

சட வாயு என்கிற சடாரி


சட வாயு என்கிற  சடாரி
என்னுடைய ஆங்கில சித்தியிலில் ஓர் சில இடங்களில் இந்த சட வாயுவின் வெளிப்பாடுகளை விவரித்தவாறு சென்றிருக்கிறேன். சடவாயு தன் தன்மையாய் பரந்து விரிந்து எல்லைகளைத் தாண்டி மகாபிரபஞசத்தை தொட்டு ஓடும், இந்த மாபெரும்சக்தியின் ஓட்டத்தை வார்த்தைகளுக்குள் அடக்கிக் கொண்டுவருவது மிக சிரமமே. சடவாயு என்பது மனித உடலில் நிரந்தரமாய் இழையோடி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாய் செயல்பட்டுக் கொண்டிருந்து வரும் ஒரு பேராற்றல். 
மனித உடல் மகா பிரபஞ்சத்திலிருந்து சக்தியை உறிஞ்சியெடுத்து தவசக்தியாய் அதை அவரவர் தவநிலையின் இயல்புகளுக்கேற்ப்ப உள்ளுக்குள் பரப்பிவைத்திருக்கக்கூடிய பெரும் பெட்டகமது. தாயின் உடல் விட்டு ஜனிக்கின்ற காலத்தில் இந்த சடவாயு தாயின் சடவாயவால் குழந்தையை வெளியேற்றுகிறது என்பது சூட்சுமமாய் வேதரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள். மிக சூட்சுமமாய் கிளர்ந்து எழும்பும் இத்தகைய நறுமணம் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமாய் விவரிக்கமுடியாத ரகசியமாக உள்ள நறுமணமாய் அமைகிறது. ஒன்றுக்கொன்று வேறுப்பட்டுயிருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடனே இயங்கிக் கொண்டிருக்கிறது.
சில சமயங்களில் சடவாயு உடல் தவசக்தியினாலும் பிரபஞ்ச சக்தியின் தொடர்புகளினாலும் உடலைவிட்டு அணுக்கள் கூட்டுக்களில் பரவி வெளியேறுகிறது. சில தவசிகளின் புறத்தில அழுக்காய் தோன்றினாலும் அவர்தம் அறுகாமையில் நாம் செல்லும் நேரத்தில் சட்டென்று நறுமண வீசும் துகள்கள் வெளிப்பட்டு நம் புலன்களுக்கு எட்டி விடக் கூடிய நிலையில் எழும்பி பரப்பிவிடும். அவையாவும் இந்த உடல் கூட்டுக்களில் இருந்து கிளம்பியதிலிருந்து உருவானவையே. பல சமயங்களில் பல உண்மையான தவசிகளின் அறுகாமையில் நான் உணர்ந்த இத்தகைய நுகர்வுகள் வாசகர்கள் இனி உணர்ந்துக் கொள்ளலாம்.
ஒவ்வொறு மனித அக உடலிலும் இத்தகய நறுமண வீசும் கதிர்கள் புற புலன்களுக்கு எட்டாதவையாகயிருந்து வருகின்றன. உள்ளொளி பூத்து குலுங்க ஆரம்பித்தவுடன் அகத்திலிருந்து வெளிக்கிளம்பகின்றன. பல வகையான உயர்சத்துமிக்க கதிர்கள் தவசீலர்களின் ஒளியை புறத்திலிருந்து வெளிப்படுவதை தவிர்த்துவிடுகின்றன. இயற்கையின் மிகயுயர்ந்த ரகஸியங்களைக் காக்க அதன் வெளிப்பாடுகளில் உள்ள ரகசிய ஒளிக்கற்றைகளாலும் சமாதிநிலையிலுள்ள யோகிகளின் புறத்தில் அமைந்த நடமாடத்தினாலும் இத்தகைய சூட்சுமங்ளை மனித மனங்களுக்கு எட்டாமல் செய்துவிடுகின்றன.
பரம்பரை வழிபாடுகளினாலும் மந்திர உச்சாடங்களினாலும் அக உடலிலிருந்து வெளியேறிவறும் சக்தி வட்டம், சிலருடைய புறஉடலில் தோய்ந்து காணப்படும். தவ ஆற்றல் கூடும் போது வெளிர்நீலம் அமைந்த சக்கரம் உடலைவிட்டு அவரவர் உடலைசுற்றி ஒளி வட்டமாய சுற்றி வருவதை யோகிகள் உணர்ந்தமையால், அவரவர் தகுதியை தவசிகள் இத்தகைய உள்ளொளியால் உணர்கின்றனர். இது ஆரா அல்ல; அதைவிட மிக அரிதான ரகசிய பெட்டகத்திலிருந்து கிளம்பியவை. சூக்கும உடலுக்கு தன்னை இயற்கையிலேயே காத்துக் கொள்ளும் வல்லமை அமைந்தேயிருக்கும். மாறாக தவ வலிமைக் கூடி வரும் காலத்தில் அது விலகி வழி விட்டு விடும். சூக்குமஉடல் தன்னை அவ்வளவு சீக்கிரத்தில் வெளிக்காட்டாமல் மனத்தின் கவனத்தை மற்றவற்றில் திசை திருப்பி கொண்டியிருக்கும்.
விலங்குகள் இத்தகைய மனித சடாவாயவை மிக எளிதாக கண்டுகொள்கின்றன. நாய் பன்றி மற்றும் சில குறிப்பிட்ட விலங்குகள் இந்த சடவாயுவை நுண்ணுர்வாலும் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புக்கொண்டிருப்பதையாலும் மிக எளிதாக கவர்ந்துக் கொள்கின்றன. நாயையும் பன்றியையும் விலக்கி வைத்திருப்பது இதுவே காரணமாய் அமைந்துவிடுகிறது.
சாத்திரங்கள் மிக ரகஸியதன்மையுடனே பேணப்பட்டு வருகின்றன. இதன் மூலத்தை தகுதியறியாதோரை தவிர்க்கவேண்டி இன்றுவரை மிக ரகஸியமாய் பாதுகாக்கப்பட்டு உரியோருக்காக காலம் காலமாய் காத்துக் கிடக்கிறது. சடாரி என்று சிலர் சொல்கின்றனர். முழுமையும் உணராமல் சொல்லப்பட்டு வரும் வெளிப்பாடுகள் அவை.
மையத்தைவிட்டு தகுதியில்லாதோரை சாஸ்திரங்கள் மிக துாரத்திற்குக் அப்பால் கொண்டு சென்றுவிடுவதால் பலர் வெறும் கொட்டைகளையும் மணியையும் உருட்டி, பாட்டுக்கள் பாடி, பஜனை செய்து, மந்திரம் ஜெபித்து, சாஸ்திரங்களுக்குள் காணாமல் போய்விடுகின்றனர். ஞானத்தை அடைய பிறவியெடுத்து வருபவர்கள் சரியான நேரக்கணங்களில் தகுதியுடைய குருவின் முன்னின்று பிறவியையும் பிறவித்தொடர்பையும் அறுத்தெடுக்கின்றனர். இவர்களே சட வாயுவை இறுக்கி மகா பிரபஞ்சத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனித மனங்ளை பிசைந்து அவரவர் தகுதிகேற்ப்ப மற்றவர்க்கு உணர்த்திவைக்கின்றனர்.
பொதுசாரம்
பல அன்பர்கள் ஆன்மிகத்தை தவறாக புரிந்துக்கொள்கின்றனர். அண்மையில் பலர் என்னிடம் தாங்கள் துறையில் இருந்து கொண்டு ஆன்மிகத்தைப் பின்பற்றி வருவதுப்போல் தங்களுக்கு கிடைக்குமா என்பதுப் போன்ற கேள்விகள் பல அன்பர்களால்  கேட்கப்படுகிறது. துன்பங்களில்லாத வாழ்க்கையேது?.
இல்லற வாழ்க்கையின் முதற்படியிலேயே எங்களுக்கு சம்மட்டியாய் அடி விழுந்தது. எங்கள் முதல் குழந்தை எதிர்பாராவகையில் கரு சிதைவில் கரைந்துப்போனது. இரண்டாவது ஆண் குழந்தை முழுவதுமாய் பிறந்து இறந்து அதன் உடலை கைப்பையில் (bigshopper) கொண்டுச்சென்று குற்றால நீரோட்டத்தில் எரித்துக் கரைத்ததை வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதது. கண்களை விட்டு மறைய இயலாத பிம்பங்கள் அது. பகைவர்க்கு கூட வரக்கூடாத கஷ்டங்களின் எல்லையில்லா துன்பியல் நிகழ்ச்சிகள் அது. இதைப்போல் எத்தனையோ வகை வகையாய் துன்பங்கள் இல்லறவாழ்வில் உருவாகி பின்னர் சிறிது சிறிதாக பெருகி பெருகி உடலை மனதை சிதைத்த பின்னரே இயற்கை உண்மையான ஆன்மிகத்திற்க்கு என்னை வழிக்காட்டியது. ஊழ்வினையின் கருணையில்லாத கண்களால் நிகழ்ந்த சம்பவங்கள் இது. அதே ஊழ்வினையே தகுதியான குருவின் முன் என்னைக் கொண்டு சென்று நிறுத்தியது. 
ஆன்மிகம் என்பது மிக கரடுமுரடான பாதையே. வெறும் தீட்சையாலும் மந்திரபிரயோகங்களினாலும் எல்லையை தொட முடியாத மிக ஆழ்ந்த வெறுமையது. அது இரக்கமின்றி பின்பற்றுவோரை கசக்கி சக்கையாய் பிழிந்து விடக்கூடிய தன்மையை மட்டும் வைத்திருக்க கூடியது.  இவையெல்லாம் கழிந்து வாழ்க்கையையும் அதன் தொடர் ஓட்டமான கர்மாவையையும் வென்று வருவதே அறிவு என்கிறார்கள் மகா ஞானிகள். வேத ஞானம் வெறும் வாசிப்புகளுக்கும் பஜனை செய்வதற்கும் கொட்டைகளை உருட்டுவதற்கு மட்டும் பயன் படுமே ஒழிய உண்மையான ஆன்மிகத்திற்கும் அதன் ஆழத்தில் மூழ்கியிருக்கும் ஞானத்திறவுக்கோலை திறப்பதற்கும் பயன்படாது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.



  

5 comments:

  1. Again as you said all person (manidam) in this goes through what's fated. There are so many was people learn from good and bad. They ( including me) don't have proper people to guide to proper path (kalathin kolam). we learn from people like you that has learned proper. Feel free to pour your knowledge. Let the others copy you and paste in their blogs. But always remember ( the seed they get is from you) and you need to know that holding knowledge without teaching also a karma. God always there to see alll this and he knows what's to do. continue with your great quest. And spill some for us too :)

    ReplyDelete
  2. vijayan, i disclosed many things in this post, if u read once again on these two posts, it will come to know and understand that, where i squeezed the hidden secrets of our yogic practices. if i ll give as it is and keep it on the plate and serve to people,there will be a huge misunderstanding of the techniques and unable to follow the right path and move away from their real practices. all my gurus taught me the basics on these type of meditations. gradually step by step through many years i ve started observing on these splitting of energy from the internal souls and practicing for a long duration of years on how the energy moves inside the body. if i touch the location and show it to the people, then immediately they will be thinking on unusual things and practice externally. its not external touch sir. its always coming from internal touches through silver cord of many yogis. i stand here on these direction between those people and away form what u ve mentioned above. if any person had been matured on these type of yogic practices. these two posts is more than enough to trigger their actual path and shut down all their external practices once reaches their conclusion. repeatedly said about destiny and fate is different from one another as i said in many posts. thanks for u r valuable comments and requested to comment on further posts.

    ReplyDelete
  3. Your comments is well excepted. I have a question. Maybe its of topic but its important. Can you advice me on the Kulatheiva valipadu. What is kulatheiva valipadu. How it effect us? Proper way to practice it? Do they have any relation with spiritual path and relating to it?
    please advice.

    ReplyDelete
  4. updating posts are temporarily stopped and given a time for reciprocation on comments by others especially on some posts. most of the people hided their faces or created temporary blogs and given comments on some posts if they had gone through, misread without proper understanding and sending mails with irrelevant questions on different topics. readers are adviced to read more books especially on spiritual, it may be in tamil or any languages which ever makes you comfortable and closely approach through your mind. spiritual and astrology shows the difference when its exaggerated in advance stages. if readers wants to clarify especially on some posts may please be requested to give comments transparently and open u r real faces on blogs with details and send mails. if readers wants to know personal related things, they can also contact through my phone.

    ReplyDelete