Thursday 6 September 2012

கடவுள் துகள்கள்-1


கடவுள் துகள்கள்-1 
(KADAVUL THUGALGAL)

ஞானத்தை முதன்மையாக்கிக் கொண்டு தேடுதலையும் அதை அறிதலையுமே தின வாழ்கையாக்கிக் கொண்டு வந்தோமேயானால் அறிவுக்கண் திறந்து வழிவிடும்.  இதுவொரு வகையான ஏமாற்று வித்தை.
அதனுடே நம் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடும். கோமணம் சகிதம் நிற்க வேண்டியது தான். இன்னும் அனைத்தையும் துறந்தோமானால் நிர்வாணமாக நின்று சிஷ்ஷைகளுக்கு அருள் பாலிக்கலாம். குடும்பம் நம்மைவிட்டு போவதற்குரிய சுற்று சூழல் உருவாகிக் கொண்டேவரும் அல்லது நாம் விலகி நிற்க வேண்டியது வந்தே தீரும். இதையெல்லாம் கடந்து வருவதற்கே குருவும் அவருடைய வரையறைக்கப்பட்ட தவங்கள் உயிர்க்குள் விளையாடி பிறவியை அறுத்து ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுக்களை அவிழ்த்து வெறும் வெற்றிடமாக இருப்பு நிலைக்குச் சென்று விடும்.
தவ ஆற்றல் இருப்பு அடைவதற்குரிய வழியை கண்டு பிடித்து கொண்டவுடன். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவ்விடத்திற்கு போவதற்கு எத்தனிக்கும். சில சமயம் போய் வந்தவண்ணமிருக்கும். பல தடைகள் கடந்து அதை அடைந்த நிலையை உணர்ந்துவிட்டோமேயானால் அதற்கு அப்பால் சென்றடையவேண்டிய எல்லை மிக பிரமாண்டமாக இருக்கிறது என்பதனை மனம் மிக எளிதாக உணர்ந்துவிடும். குடும்ப வாழ்க்கையில் இதையடைய எடுக்கும் முயற்சிகளெல்லாம் ஆரம்ப நிலையிலேயே உதிர்ந்துவிடுகின்றன. இது ஒரு வகையான பேரியக்க ஆற்றல் ஏற்படுத்தும் மாபெரும் தடைகற்களே.
எல்லையில்லா உழைப்பால் கால சக்கரத்தையும் அதன் அமைப்பையும் அதன் குறுக்காக நடக்கும் கலையே யோகத்தின் ஆரம்பநிலை என்ன என்பதனை மனம் உணர்ந்துக்கொள்ளும். கால சக்கரம் அத்தனை சீக்கிரம் வழி விட்டு விடாது. மனத்தை ஏமாற்றி கனவுகளில் நம் பிரகஞ்சையோடு இருக்கின்ற காலத்தில் காலசக்கரத்தின் பாதையை திறந்து மாய பிம்பத்தை காட்டும். பல சமயங்களில் காலசக்கரத்தின் எல்லைக்குட்பட்ட குறுக்குப்பாதையில் பயணிக்க பயணிக்க மனம் விரிவடைந்துக் கொண்டேயிருக்கிறது. நம்முடைய கருமையத்திற்கும் பேரியக்க மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு இந்த கால சக்கரம் வழிவிடும் சமயங்களில் மட்டுமே உணர்ந்துக்கொள்ள முடிகிறது.
அதை இயக்கத்திற்குக் கொண்டு வரும் காலத்தில் மனம் பேரியக்க பிரபஞ்சத்தில் சில காந்த துகள்களை உரச வரும் போது அதன் பதிவும் நம் பிறவியின் தொடர்புகளும் கோர்வையாக கோற்க்கப்பட்டதுப் போல் மனதினுள் வெளிப்படுகின்றன. யோகநிலையின் உச்ச நிலையில் இவ்வகையான தொடர்புகள் மனதுக்கு கைகூடுகின்றன.
கால சக்கரத்திற்குள் அடைபடும் போது காட்சிகள் விரிந்து மனத்தின் தன்மைகளை பரிசோதிக்கின்றன. மனம் அதற்குள் அடைபடவே இத்தகையான காட்சிகளை நேரடியாக தோற்றுவிக்கப்படுகின்றன். வான்துகள்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் அதை வெட்டிவிட முடியாமல் கால சக்கரத்தின் பிடிக்குள் அடைபட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
நம் கருமையம் எப்பொழுதும் பேரியக்க மண்டலத்தின் துகள்களின் தொடர்போடேயேயிருக்கின்றன. அதன் அலைத்துகள்கள் எல்லாவற்றிலும் ஊடுருவியும்  தொடர்புக்கொண்டும் இருக்கின்றன. காட்சிகளை விரித்தக்காட்டுவதும் தேவதைகள் பேசுவதும் சித்தர்கள் உலாவுவதும் இந்த துகள் என்று சொல்லப்படுகின்ற பாதையையே அலையாம் என்கிற விண்துகள்களே.
பொது
உறக்கத்தில் பிரகஞ்சையோடு இருக்கின்ற காலங்களிலும் தவம் கைகூடும் காலத்திலும் முதிர்ச்சி நிலைகளிலும் இத்தகையான காட்சி எழுச்சிகள் தினம் ஒன்றாக வந்த வண்ணமிருக்கும். மகள் பிறந்த சமயத்தில் இத்தகையான பிரபஞ்சையில் என் இடது கை காயம் பட்டிருப்பதுப்போலவும் என்னால் அவளை கைகளில் இருத்திக்கொள்ள இயலாமல் எழும்பிய வலியை என் மனைவியிடம் சொல்லுவதுப் போலவும் பல மாதங்களுக்கு முன்னரே என்னால் மிக துல்லியமாய் உணர முடிந்தது. அதன் பிறகு மெதுவாய் என் கைகள் காயமின்றி காயப்பட்டு இன்று கைக்கட்டுடன் அதன் வலியை ஜீரணிக்க முடியாமல் மிக கஷ்டங்களுடன் குழந்தையை எடுக்க இயலாமல் வலியுடனிருக்கிறேன். இது அகம் விரிவடைந்து மனது காலசக்கரத்தின் எல்லையைத் தாண்டி துகள்களுக்குள் உள்ள நம்முடைய பாதையில் செல்லும்போது ஏற்படுகின்ற காட்சிகள் இவைகள். பேரறிவாக உள்ள நம் கருமையத்திற்கும் உடலின்றி செயல்படக்கூடிய அந்த எல்லையில்லா பிரகஞ்சையில் எல்லைக்குட்பட்ட இந்த கருமையம் தொடர்புக்கொள்கின்ற பொழுது ஏற்படுகின்ற உயர்தரிசன காட்சிகள்.
ஒரு முறை நிறைய பேரழகுப் பெண்கள் முழு நிர்வாணமாய் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரையும் நான் பார்க்கிறேன். பேரழகிகளை நான் நிர்வாணமாய் பார்க்கிறேன். உடம்பினுள் அந்த எழுச்சி ஆரம்பித்து கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கின்றன. இது உண்மையா என்று அறிய நான் மிக அருகில் சென்று அவர்களின் உடல்களைப் பார்க்கிறேன். மிக துல்லியமாய் உடல்கள் கண்களை கூச செய்கின்றன. ஆவல் பெருகி மிக நெருங்கி அவர்கள் உடல்களைப் பார்க்கிறேன். எல்லோருடைய அங்கங்களை மிக தெளிவாய் பார்க்கிறேன். ஒரு அழகியின் அருகில் சென்று மார்பின் மேல் கைகளை வைத்துப் பார்க்கிறேன். அந்த அங்கம் அதன் வெப்பம் அதன் ஸபரிசம் எல்லாம் என் கைகள் மார்பின் மேலிருக்கும் போது உணர்நதேன். பக்கத்தில் மிகப்பெரிய வெண்மையான தாடி மயிருடன் ரிஷி ஒருவர் வந்து என்னைப்போகுமாறு சொன்னார். நான் அங்கேயே நின்று மற்ற நிர்வாண அழகிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். யோகி அருகில் வந்து இது தேவதைகளின் உலகம் நீ இதை தாண்டி செல். இங்கிருந்தால் இதை கடக்க மாட்டாய். என்றார்.
நான் விழித்தெழுநதேன் என் கைகளுக்குள் அந்த மார்பின் ஸபரிஸம் பல ஆண்டுகளாய் இன்றும் இருந்து வந்தவண்ணமிருக்கிறது. அந்த காட்சிகளுக்குள் மனம் மிக எளிதாக பயணித்து வெளிவந்துவிடுகிறது. என் எல்லைக்குட்பட்ட பிரகஞ்சையால் நான் அதை காண நேர்ந்தது. பெரும் தவிப்பை அது மென்மேலும் உருவாக்கியது. பல சமயங்களில் அந்த நிகழ்ச்சியின் விடுபட்ட தொடர்புடன் பயணம் செய்திருக்கிறேன். கருமையப்பதிவுகள் காலத்தைக் கடந்து செல்லும்போது மனத்தின் தொடர்ப்புகளுக்கு ஏற்ப்ப உடலை கடத்தியாக கூட்டிச்சென்று இத்தகைய உலகங்களில் தொடர்ப்பை மனத்திற்குக் கொடுத்து சோதிக்கின்றன. அதை கடந்து வருபவனை மீண்டும் உறவுகளுக்கு இட்டுச் செல்லும்.  பேரழகிகளை நிர்வாண உயிர் காட்சிகளாக கண்டுடைய செய்து மனதை மயக்குமற செய்கின்றன. அதன்பின் பெரும் காட்சி பிழைகள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. பேரழகிகள் மறைந்து நாம் பழகி திரிந்த அறிந்த பெண்கள் காட்சிகளாக உருமாறும் போது தோன்றும் பெரும் அவஸ்தைகள் தவத்தை கைவிட்டு ஓடவே செய்யும். கடவுள் துகள்கள் நம் காலசக்கரத்தின் பாதையில் ஒத்திசையாக இயங்கிக்கொண்டுயிருக்கின்றன என்பதற்கு யோக நிலைகள் கண்களின் முன் கொண்டு வரும் காட்சி பிழைகளாகவும் உயர்தரிசன பேரியக்க மண்டலத்தின் சாட்சியாகவும் இருக்கின்றன.

Spiritual and Siththargal in English
http://kthillairaj.blogspot.in/2012/08/secrets-of-interpretations-behind-7th.html